கொரோனாத் தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பின்னணியில் கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வட பகுதி உள்ளிட்ட பாகங்களில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சென்று வரும் கச்சதீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கொரோனா அச்சுறுத்தல் நிலை காரணமாக இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மறைவாட்ட குருமுதல்வர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்